தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் செய்முறைத்தேர்வு!
தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கான நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
செய்முறை தேர்வு தொடக்கம்:
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. மேலும் நடப்பு ஆண்டிலாவது பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்களும், மாணவர்களும் இருந்தனர். இதற்கிடையில் இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து வந்தார். அதே போல், ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. அதன்படி, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்து தளர்த்தப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டார். அதன்படி 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல் 10 ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகிறது. இந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24 முதல் மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 6 முதல் கோடை விடுமுறை!
இதற்காக பள்ளிகளில் ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் உயிரியல், வேதியல், இயற்பியல் உள்ளிட்ட முதன்மை தேர்வுகளுக்கு செய்முறை தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது. இந்த கல்வியாண்டில் செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைத்து அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (ஏப்.25) தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்