TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வை கணினி வழியாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி ஆகும்.
புதிய விதிமுறைகள்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு செய்து வருகிறது. தகுதியானவர்களை பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை நடத்தி TNPSC தேர்தெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், TNPSC மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வை கணினி வழியாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்யா, சஞ்சீவ் ஜோடிக்கு 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை வழங்கிய மாமியார் – வைரலாகும் வீடியோ!
தமிழக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் வரும், 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 19 ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியாக நடைபெறும். இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்த தேர்வானது சென்னை, மதுரை , கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டுமே நடத்தப்படும். இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஷாக் அறிவிப்பு!
மேலும் சிறப்பு பிரிவினருக்கு 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் 2.05 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். இதுவரை அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டுமே கணினி வழியில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வும் கணினி முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை அறிய, TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.