தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்வுத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு அறிவிப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் எதிர்காலம் கேள்வி குறியானது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு சில மாதங்களாக மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த தேதியையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் படி முதற்கட்டமாக நேற்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது.
வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அந்தந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த பொதுத்தேர்வு குறித்து தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் படி இந்தியாவில் அதிகம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. 10,11,12 ஆம் வகுப்புகளை சேர்த்து மொத்தம் 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மேலும் இந்த தேர்வு பணியில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல், விடைத்தாள்களை ஏற்றி செல்லுதல் என அதிக அளவில் பணம் செலவாகி இருக்கிறது. அந்த வகையில் 3 வகுப்புகளுக்கும் சேர்த்து 30 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.