தமிழக காவல்துறையினருக்கான முக்கிய எச்சரிக்கை – டிஜிபி அறிவிப்பு!
தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கும் தெருவோரக் கடைகள், வணிக நிறுவனங்கள், மசோதாக் கடைகள் போன்றவற்றை மூட வற்புறுத்த கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறை எச்சரிக்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலுமே ரோட்டோர கடைகள், உணவு வளாகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும், தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பிறகு தான் தெருவோரக் கடைகள், வணிக நிறுவனங்கள், மசோதாக் கடைகள், சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. முதன் முதலாக தமிழகத்தில் மதுரையில் தான் 24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இது மாதிரி 24 மணி நேரமும் கடைகள் செயல்பட சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அரசு அனுமதி தந்தால் கூட இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம் மற்றும் உணவகங்களை மூட போலீஸ் வலியுறுத்தி வருவதாக சில குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!
இந்நிலையில், இரவு நேரங்களில் இயங்கும் தெருவோரக் கடைகள், வணிகவளாகம் மற்றும் உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது எனவும், 10-க்கு மேற்பட்ட ஊழியர்கள் கண்டிப்பாக அந்த தெருவோரக் கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் எனவும், அப்படி 10 ஊழியர்கள் வேலை பார்த்தால் மட்டுமே அந்த கடைகள் 24 மணிநேரமும் இயங்கலாம் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அரசாணையை காவல் ஆணையர்கள் அனைவரும் பின்பற்றும்படி டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.