விமான பயணிகள் கவனத்திற்கு – Air India வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்!!
சமீப காலமாக விமான பயணத்தின் போது பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ஏர் இந்தியா:
நாட்டின் பிரபல நிறுவனமான ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விமான பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அண்மையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏர் இந்தியா குழுமத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஏர் இந்தியாவிடம் கேள்வி எழுப்பியது.
9 & 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய Skill Subjects திட்டம் – CBSE வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதற்கு ஏர் இந்தியா நிறுவன தலைவர் புகார் குறித்து உரிய விளக்கத்தை அளித்துள்ளார். அதில் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணம் செய்த ஒரு பெண் பயணி அருகில் இருந்த ஆண் பயணி தன் மீது சிறுநீர் கழித்ததாக தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். சிறிது நேரம் நேரம் கழித்து ஆண் பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறினார். அதனால் தான் காவல் துறையில் நாங்கள் புகார் பதிவு செய்யவில்லை.
தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஆண் பயணி விமானத்தில் பறக்க 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் பயணிக்கு விமான கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் யாராக இருந்தாலும் முறை கேடாக நடந்து கொண்டால் உடனடியாக பயணிகள் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று ஏர் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் பிரச்சனை தீர்க்கப்பட்டாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.