தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க முக்கிய நடவடிக்கை – டிஜிபி அதிரடி!
தமிழக அரசின் காவல் துறையில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக காவல்துறையினர் நியமனம் செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்டர்லி முறை:
தமிழக காவல்துறையில் காவலர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்கள் காவல்துறைகளில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக பணி அமர்த்தப்பட இருப்பதாக பல நாட்களாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது. உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் வீடுகளில் வேலைக்கு பயன்படுத்தி வருவது குற்றம் என்பதால் உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து டிஜிபி ஆர்டர்லி முறையை ஒழிக்க, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். இது குறித்து சென்னை ஐகோர்ட்டு நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கு எதிர்ப்பு – தமிழக முதல்வர் கடிதம்!
அதன் முடிவில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி டிஜிபி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக் கூடிய ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இந்த உத்தரவை சரியாக கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.