2022 முதல் புதிய தேசிய கல்விக்கொள்கை அமல் – 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
அசாம் மாநிலத்தில் புதிய தேசிய தேசிய கல்விக் கொள்கை ஏப்ரல் 1, 2022 முதல் மாநிலத்தில் அமலுக்கு கொண்டு வர உள்ளதாக மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை:
அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் நேற்று கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் கல்வித் துறையின் பல்வேறு இயக்குனரகங்களில் உள்ள 767 பணியாளர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை நேற்று வழங்கினார். இவர்களில், 767 விண்ணப்பதாரர்களில், 616 விண்ணப்பதாரர்கள் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ், 32 பேர் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் கீழும், 113 பேர் உயர்கல்வி இயக்குனரகத்தின் கீழும் நியமிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர்க்கு மளிகை பொருட்கள் – அதிகாரி உத்தரவு!
மேலும், ஆறு பேர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மாநில கவுன்சிலின் இயக்குநரகத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, ஏப்ரல் 1, 2022 முதல் புதிய கல்விக் கொள்கையை மாநிலத்தில் அமல்படுத்த மாநில அரசு தயாராகி வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் படி, மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். ஒரு வருடத்திற்குள் அரசு கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் உள்ளது.
ஆவின் நிறுவனத்தில் 10 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் வழங்கல்!
அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்த செயல்முறை முடிக்கப்படும் என்று அவர் கூறினார். முதல்வர் மேலும், மாநில அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதிமொழி அளித்துள்ளது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. TETஐ தவிர்த்து கல்வித்துறையில் இன்னும் பல ஆயிரக்கணக்கான வெளிவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.