தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலிய மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என மாநில, பாமக இளைஞரணித் தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடைக்காது என பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாமெனவும், அதிக பலன்களை வழங்கும் வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்க தயங்கியதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக முதல்வர் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.6000 உதவித்தொகை – ஆதாரை இணைக்க ஏப்ரல் 31 கடைசி நாள்!
இந்தக் கோரிக்கைகளுக்கு பிறகு ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்தபடி காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வராத நிலையில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாநில, பாமக இளைஞரணித் தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு எப்போது கொண்டு வரும் எனவும் முதல்வர் அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.