FD திட்டங்களுக்கான புதிய விதிமுறை அமல் – RBI வெளியீடு!
இந்திய ரிசர்வ் வங்கி நிலையான வைப்புத் தொகை திட்டங்களுக்கான புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. மேலும், என்னென்ன புதிய விதிமுறைகள் அமலாகியுள்ளது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
FD திட்டம்:
இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி விட்டன. அதாவது அனைத்து அரசு தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நிலையான வைப்பு தொகை வட்டி விகிதங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. இதனிடையே இந்திய ரிசர்வ் வங்கி புதிய நிலையான வைப்புத் தொகைக்கான விதி முறைகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதாவது உரிமை கோரப்படாத அல்லது காலாவதியான நிலையான வைப்புத் தொகைகளுக்கு செலுத்தப்படும் வட்டி தொடர்பான விதி முறைகளில் மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறையின்படி, ஒரு டேர்ம் டெபாசிட் முதிர்ச்சியடைந்து வருமானம் செலுத்தப்படாமல் இருந்தால் அந்த உரிமை கோரப்படாத தொகைக்கு குறைந்த வட்டி விகிதம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்கு ‘Orange’ அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும், வைப்புத்தொகை முதிர்ச்சி அடையும்போது அந்த வாடிக்கையாளர் நிலையான வைப்புத் தொகையை திரும்பப் பெற வேண்டாம் என முடிவு செய்தால் நிலையான வைப்புத் தொகையின் முதிர்வுக்கு பின் குறைந்த வட்டி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமை கோரப்படாத நிலையான வைப்பு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வட்டி விகிதம் அல்லது சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையான வைப்புத் தொகைக்கான புதிய விதிமுறை இந்தியாவில் உள்ள அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் உள்ளூர் பிராந்திய வங்கிகளுக்கான வைப்புத்தொகை அனைத்திற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்