தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த இதனை செய்தாலே போதும் – வெளியாகுமா அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தற்போது சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா என்பது குறித்து பார்ப்போம்
பழைய ஓய்வூதியத் திட்டம்
நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக கல்லூரி மாணவிகளுக்கான ரூ. 1000 உதவித்தொகை திட்டம் – முதல்வர் தொடக்கி வைப்பு!
அதன்படி தற்போது ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்ப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதால் மாநில அரசுக்கு எதிர்காலத்தில் நிதிச்சுமை அதிகரிக்கக்கூடும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்த நிலையிலும் இமாச்சல பிரதேச அரசு தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளதாவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பதற்கு முன்பாக அரசு தேவையான பட்ஜெட் ஒதுக்கீடுகளை செய்துள்ளதாக கூறியுள்ளார். இது போன்று அரசு தேவையான பட்ஜெட் ஒதுக்கீடு செய்வதன் மூலமாக நிதி மேலாண்மை சீராக கொண்டு வர முடியும். இதே போன்று தமிழகத்திலும் அரசு நடவடிக்கை மேற்கொண்டால், தேர்தல் வாக்குறுதியில் அளித்தப்படி பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.