தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வால் பாதிப்பு – சிறப்பு ஆய்வுக்குழு தகவல்!
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் பொது நுழைவுத்தேர்வில், மாணவர்களுக்கு பாதிப்புகள் உள்ளதாக நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழு தகவல் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு
மத்திய அரசால் மருத்துவ படிப்பு மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் கேட்கப்படும் பாடங்கள், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கானது அல்ல என்பது நீட் தேர்வுகளை எதிர்க்கும் பொதுவான கருத்தாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். தவிர தற்போது ஆட்சியமைத்துள்ள புதிய அரசும் நீட் தேர்வு நடத்துவதற்கு கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறது.
மத்திய வர்த்தக வட்டார வணிகங்கள் பாதிப்பு – நிபுணர்கள் கருத்து!!
முன்னதாக இந்த ஆண்டு தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்ற போதிலும், நீட் தேர்வுக்கு மாணவர்கள் ஆயத்தப்பட வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து வந்த அதிகாரிகள் குழு நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் கூறுகையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறோம். அந்த வகையில் குழுவில் உள்ள அனைவரும் நீட் தேர்வை நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 21 ஆம் தேதி நடைபெறும் 2 ஆம் மட்ட கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.