தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு உடனடி விடுமுறை? அரசின் நிலைப்பாடு என்ன?
கொரோனா தொற்று தற்போது மெல்ல குறைந்த கையோடு அடுத்து ப்ளூ காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் விடுமுறை:
கடந்த சில ஆண்டுகளாகவே மாணவ மாணவிகள் பள்ளி சென்று கல்வி கற்பது அரிதாக உள்ளது. ஏனெனில் கொரோனா தொற்று பள்ளி மாணவர்களின் வாழ்க்கையைவே புரட்டி போட்டது. இருப்பினும் கற்றலில் இடை நிற்றல் வரக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வழி வகுப்புகள் ஆசிரியர்களால் எடுக்கப்பட்டது.
நாட்டில் இழுத்து மூடப்படும் அரசு அலுவலகங்கள் – பொருளாதார நெருக்கடி எதிரொலி!
2022-23 கல்வி ஆண்டில் தான் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், குழந்தைகளிடையே வைரஸ் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் இந்த காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே புதுச்சேரி அரசு 1 – 8 வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தமிழகத்திலும் 1 – 9 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். மேலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மக்களின் பயத்தை போக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்