நாடு முழுவதும் ஜூன் 18ம் தேதி மருத்துவர்கள் போராட்டம் – ஐஎம்ஏ அறிவிப்பு!!
நாடு முழுவதும் கடந்த சில வார காலமாகவே மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வருகிற ஜூன் 18ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக ஐஎம்ஏ அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் போராட்டம்:
இந்தியாவில் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவின் முதல் அலையை ஒப்பிடுகையில் கொரோனாவின் இரண்டாம் அலையில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கால கட்டத்தில் மருத்துவர்கள் அயராது உழைத்து மக்களின் உயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நாட்டில் கடந்த சில வாரமாக மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவர்கள் மீது தேவையற்ற தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறை தாக்குதல்கள் அசாம், பீகார், மேற்கு வங்கம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. தற்போது இதை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஐஎம்ஏ அறிவித்துள்ளது.
பழைய 5 ரூபாய் நாணயத்திற்கு ரூ.30,000 பெறலாம் – எப்படி தெரியுமா?
இது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து ஐஎம்ஏ கூறியதாவது, வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் மாஸ்க் அணிந்து, ரிப்பன் மற்றும் கருப்பு பேட்ஜ்கள் அணிந்து வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி அன்று விழிப்புணர்வு பிரச்சார போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.