இந்தியாவில் மே மாத இறுதியில் கொரோனா பரவல் குறையும் – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு!!
நாட்டில் கொரோனாவின் இரண்டவது அலை மிக தீவிரமாக மக்கள் அனைவரையும் பாதித்து வருகிறது. ற்போது இது குறித்து ஆராய்ந்த ஐஐடி விஞ்ஞானிகள் மே மாத இறுதியில் நாட்டில் கொரோனா நோய்பரவல் குறையும் என்று கணித்துள்ளனர்.
கொரோனா நோய்பரவல்:
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது பரவும் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பகுதி நேர மற்றும் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 3.30 லட்சத்தை தாண்டி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் மக்கள் அனைவரையும் சுகாதாரத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா நோய்பரவல் குறித்து ஹைதெராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது, தற்போது நாட்டில் 24 லட்சம் பேர் கொரோனா நோய்த்தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி (DA) வழங்கப்படாது – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
இந்த எண்ணிக்கை மே மாதம் 11 முதல் 15ம் தேதிகள் 33 முதல் 35 லட்சமாக அதிகரிக்கக்கூடும். மே மாத மத்தியில் கொரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து மே மாத இறுதியில் மிக கணிசமாக குறையும் என்று கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்தர் அகர்வால் தெரிவித்தார். கொரோனா உச்சத்தை கணிக்க ஏற்கனவே பின்பற்றப்பட்ட கணிதவியல் கோட்டபாடுகளில் சில தவறுகளை களைந்து தற்போது புதிய கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.