இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா 4வது அலை – IIT கான்பூர் எச்சரிக்கை! பொதுமக்களே உஷார்
இந்தியாவில் மூன்று அலைகளை தொடர்ந்து ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை உருவாக உள்ளது என்று IIT -கான்பூர் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா 4வது அலை:
கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் உள்ள வுஹான் நகரில் பரவத் தொடங்கின. இதன் தாக்கம் காரணமாக வுஹான் நகரில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. மேலும் இந்த தொற்று மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ தொடங்கியது. மேலும் இந்த தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக தொற்று பாதித்த நாடுகளில் நோய் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் கொரோனா பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து கொரோனா 2வது அலை, 3 வது அலை என்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. கொரோனாவுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டறிப்பட்டு அனைத்து நாடுகளிலும் செலுத்தப்பட்டு வருகிறது.
BOB வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – தவறாமல் படிங்க!
இந்த நிலையில் கான்பூர் பகுதிகளில் கொரோனா தாக்கம் குறித்து IIT கான்பூர் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவில் இந்தியாவில் கொரோனா 3வது அலையை தொடர்ந்து ஜூன் மாத மத்தியில் கொரோனா 4வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த 4வது அலை பாதிப்பு தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்காம் அலையின் தீவிரம் எவ்வாறு இருக்கும் என்பது, புதிதாக உருமாற்றமடையும் கொரோனா வைரஸை பொருத்தது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z விபரங்கள் இதோ!
மேலும் கொரோனா 2 தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தி இருப்பவர்களுக்கு, கொரோனா தீவிரம் மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து IIT கான்பூரின் கணிதவியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு முடிவில் கொரோனா முதல் அலை எழுந்து 936 நாள்களுக்குப் பின்னர் நாட்டில் 4வது அலை உருவாகும் என்றும், 4வது அலை தாக்கம் ஆகஸ்ட் மாதம் உச்சமடைந்து, அக்டோபர் மாதத்திலிருந்து குறையத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.