நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ – பாஸ் தேவை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு

0
நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ - பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு
நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ - பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ – பாஸ் தேவை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆனது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் காரணமாக பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகம், முழுவதிலும் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தான் தொற்றின் தாக்கம் கட்டுக்கு அடங்காமல் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

அதனால் தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இ-பாஸ் இன்றி எந்த ஒரு வாகனமும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாமல் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறைகளினால் மீண்டும் சென்னை நகரம் ஊரடங்கில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் வரும் ஜூன் 24ம் தேதி ஐஐடி ஹைதெராபாத் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுத வெளியே வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம்,. ஆனால் இந்த தேர்வினை எழுத வரும் மாணவர்கள் இ-பாஸ் வைத்திருக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதற்கு மாற்றாக மாணவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டினை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சிக்கலின்றி செல்லவும், அதன் மூலம் தேவையாரை பதற்றம் ஏற்படாமல் இருக்கவும் இவ்வாறு உதவி செய்யப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!