தமிழகத்தில் தேர்வில்லாமல் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் (IISWC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் (29.04.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் (IISWC) வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Junior Research Fellow பணிக்கு என ஒரு இடம் இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனத்தில் (IISWC) காலியாக உள்ளது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture / Horticulture பாடப்பிரிவுகளில் Graduation Degree-யை பெற்றவராகவும் Soil Science / Environmental Science / Agronomy / Horticulture / Agrometeorology / Chemistry / Botany / Physics and Earth sciences போன்ற பாடப்பிரிவுகளில் Post Graduation Degree-யை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Field Experiments, Soil and Plant Analysis, Climate Studies, Handling Analytical Instruments போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் NET, GATE போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
- Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் HRA போன்ற இதர ஊதியங்களும் கொடுக்கப்படும்.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு தகுதி உள்ள பணியாளர்கள் 29.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
IISWC விண்ணப்பிக்கும் முறை:
Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நாளை நடைபெறும் நேர்முகத் தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.