திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – ரூ.30,000/- ஊதியம் | இறுதி அவகாசம்..!
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் சமீபத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Research Staff பதவிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு படித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் கொடுத்துள்ளோம்.
IIM Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியாகியுள்ள அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Staff பதவிக்கு தற்போது பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய commerce / economics / management / statistics போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Post Graduate, Ph.D முடித்திருப்பது அவசியமாகும். மேலும் statistical software -களில் நன்கு திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதிய தொகை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் (Interview) வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
IIM Trichy விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் Biodata வை [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 20.02.2022 நாளுக்கு முன்னதாக அனுப்பி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளையுடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவதால் இன்றே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.