IIITDM நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.70,000/-
காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM Kancheepuram) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Ad-hoc Faculty பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM Kancheepuram) காலியாக உள்ள Ad-hoc Faculty பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Ad-hoc Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science பாடப்பிரிவில் B.Tech, M.Tech அல்லது Ph.D Degree படித்தவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Teaching, Research ஆகிய பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
- Ad-hoc Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிபுரியும் போது குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
- Ad-hoc Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Seminar Presentation மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.