இக்ஃனோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – துணைவேந்தர் வெளியீடு!!
இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களுக்கான அசைன்மென்ட் (Assignment) ஒப்புவிப்பதன் காலஅவகாசம் மே மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
கால அவகாசம் நீட்டிப்பு:
இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களுக்கான அசைன்மென்ட் ஒப்புவிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 nஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடக்கவிருந்த எழுத்துத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இந்த அசைன்மென்ட்டை ஒப்புவிக்காதவர்கள் எவரும் எழுத்துத்தேர்வில் பங்குபெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் தெரிவிக்கையில், ‘நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலனுக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். அசைன்மென்ட் ஒப்புவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு குறித்து இன்னும் இரண்டு நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பொது முடக்கம் உட்பட சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் புதிய கல்விக்கொள்கை – மத்திய அரசு வெளியீடு!!
தவிர இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் பல மாணவர்கள் பணிபுரிபவர்களாக இருப்பதால் அவர்களால் குறித்த நேரத்தில் அசைன்மென்ட்டை ஒப்புவிக்க முடியாது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்பட்ட முழு முடக்கம் காரணமாக கைப்பட எழுதிய ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – அரசு அறிவிப்பு!!
அதேபோல் இந்த ஆண்டு நடத்தப்படாது. மேலும் எழுத்துத் தேர்வுகள் குறித்து துணை வேந்தர் தெரிவிக்கையில், ‘தற்போதுள்ள சூழலில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க வேண்டிய தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. கொரோனாவுக்கு எதிரான அரசின் முடிவை எதிர்பார்த்து தான் இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.