IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ. 29,200 | விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!!
மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை தகுதியான நபர்கள் மூலமாக நிரப்ப உள்ளதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிறுவனத்தில் பன்முக உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் உதவியாளர் பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு மாத சம்பளமாக ரூ.19,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் B.Sc Botany or B.Sc Agri ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ.29,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார் ரிஷி சுனக் – மன்னர் 3ம் சார்லஸ் தலைமையில் பதவியேற்பு!
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க https://ifgtb.icfre.org/advertisements.php என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022 என்பது குறிப்பிடத்தக்கது.