ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

0
ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

ஐ டி துறையில் சமீப காலமாக மூன்லைட்டிங் குறித்த விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்புக்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஐடி துறை:

இந்தியாவில் சமீப காலமாக இளம் தலைமுறையினரிடம் ஐடி வேலை மோகம் அதிகரித்து வருகிறது. அதாவது அதிக ஊதியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இந்த துறையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த துறையில் பணியாற்றும் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஐடி துறையில் வேலைக்கு சேர்வதில் இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த துறையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்லைட்டிங் சிஸ்டம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணியில் அமர்த்தும் போது இந்த மூன்லைட்டிங் பணி குறித்து அப்பொய்ன்மெண்ட் ஆர்டரில் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதாவது ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்களது பயிற்சி காலத்திலோ அல்லது பணி காலத்திலோ வேறு எந்தவொரு நிறுவனத்திலோ அல்லது அரசு வேலைகளிலோ பணிபுரிய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் கம்பெனி தங்களது ஊழியர்களுக்கு இந்த விதிமுறையை நிர்ணயித்துள்ளது. மேலும் இது ஒரு கட்டாய நிபந்தனை என்றும், இதை பின்பற்ற தவறினால் வேலைவாய்ப்பு திரும்ப பெறப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி திட்டம் – தில்லி அரசு அறிமுகம்!

இதே போல் விப்ரோ நிறுவனமும் தங்களது ஊழியர்களுக்கு நியமன கடிதத்தில் வேறு நிறுவனங்களில் பணியாற்ற கூடாது என்றும், அவ்வாறு இரண்டாம் நிலை வேலையில் பணியாற்ற விரும்பினால் அவர்களின் வணிகப் பிரிவில் உள்ள தலைவரின் ஒப்புதலை வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது ஊழியர்களுக்கு கட்டாய நிபந்தனையாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹெச் சி எல் நிறுவனமும் அவர்களது ஒப்பந்தத்தில் மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை விதித்துள்ளது. இதே போல் டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பெரும்பலான ஐடி நிறுவனங்கள் மூன்லைட்டிங் குறித்த எச்சரிக்கையை அவர்களது ஊழியர்களுக்கு விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!