கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனு வந்தால் நடவடிக்கை – முக்கிய தகவல் வெளியீடு!

0
கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனு வந்தால் நடவடிக்கை - முக்கிய தகவல் வெளியீடு!
கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனு வந்தால் நடவடிக்கை - முக்கிய தகவல் வெளியீடு!
கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனு வந்தால் நடவடிக்கை – முக்கிய தகவல் வெளியீடு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மனித உரிமை ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி உயிரிழந்ததை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவிக்கு நீதி கேட்டு பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறுதி சடங்குகளும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த மாணவி பயின்ற பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். தற்போது இந்த ஜாமீன் மனு மறுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி அமைச்சகம் முக்கிய நடவடிக்கை!

இந்த வழக்கு குறித்து பேசிய மனித உரிமை ஆணைய தலைவர், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தன்னிச்சையான நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த சம்பவம் தொடர்பாக மனுக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தற்போதைக்கு எந்த கருத்தும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மனித உரிமை ஆணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி உரிமை ஆணையத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exams Daily Mobile App Download

இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா நடைபெற உள்ளதாகவும் தலைவர் கூறியுள்ளார். மேலும் மனித உரிமை தொடர்பாக சிறப்பாக பணியாற்றிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!