IDBI வங்கி தனியார்மயமாக்கல் ஆலோசனை – ஜூலை 22 வரை விண்ணப்ப பதிவு நீட்டிப்பு!
பிரபல LIC நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் IDBI நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வரவேற்பு:
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிதி நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC), IDBI வங்கியை நிர்வகித்து வருகிறது. அதாவது LIC நிறுவனம், IDBI வங்கியில் 49.24% பங்குகளை வைத்துள்ளது. மற்ற 45.48% பங்குகளை IDBI வங்கியில் மத்திய அரசு வைத்துள்ளது. இதற்கிடையில் கடந்த மே மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் IDBI வங்கியில் உள்ள அனைத்து பங்குகளையும் விற்பனை செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து தற்போது IDBI வங்கியை தனியார் மயமாக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமலுக்கு வந்த தளர்வுகள்!!
இந்த பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்க, பங்கு பரிவர்த்தனைக்கான ஆலோசனை மற்றும் சட்டம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குபவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை நிரப்பி அனுப்புவதற்கு ஜூலை 12 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் ஜூலை 22 ஆம் தேதி வரை மேலும் 10 நாட்களுக்கு கூட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இரவு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு ரத்து – பஞ்சாப் அரசு அறிவிப்பு!
இது குறித்து முதலீட்டு பொது சொத்துக்கள் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘IDBI வங்கியில் LIC நிறுவனம் மற்றும் மத்திய அரசின் பங்குகள் விற்கப்பட உள்ளன. இந்த பங்குகளை ஒரே பரிவர்த்தனை ஆலோசகர் மேற்கொள்ளுவார். IDBI வங்கியில் உள்ள மொத்த பங்குகளையும் விற்பனை செய்ய, மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில் முதலீட்டாளர்களின் விருப்பம் மற்றும் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நிதியாண்டில் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலமாக ரூ.1.75 கோடி கிடைக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.