ஒரு நாளைக்கு ரூ.770/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசில் இருந்து தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் நுண்ணறிவு தொடர்பு அமைப்புகள் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Salesperson பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், நுண்ணறிவு தொடர்பு அமைப்புகள் இந்தியா லிமிடெட்டில் (ICSIL) Sales Person பணிக்கு என காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகம் (Computer Knowledge) பற்றிய போதிய அளவு அறிவு உடையவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Exams Daily Mobile App Download
Salesperson பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் முடிவு செய்யப்படவில்லை, இதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் பணியின் போது நாள் ஒன்றுக்கு ரூ.770/- ஊதியமாக பெறுவார்கள்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ரூ.1000/- பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் www.icsil.in என்ற இணையதள முகவரியில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அளவு இன்றுடன் (10.08.2022) முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.