டிகிரி முடித்தவர்களுக்கு 50 அரசு காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது..!
இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் (ICSI) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள CRC Executive பணிக்கு என்று மொத்தம் 50 பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு கல்வித் தகுதி, வயது மற்றும் ஊதியம் என அனைத்து தகவல்களும் கொடுத்துள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Institute of Company Secretaries of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
ICSI காலிப்பணியிடங்கள்:
இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தில், CRC Executive பணிக்கு என்று மொத்தம் 50 பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ICSI கல்வித் தகுதி:
CRC Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் ஒரு Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.
ICSI முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் Post Graduation டிகிரிக்கு பிறகு குறைந்தது 1 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம். மேலும் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
TNPSC Coaching Center Join Now
ICSI வயது வரம்பு:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 31 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 31 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ICSI ஊதிய விவரங்கள்:
CRC Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.33,000/- முதல் அதிகபட்சம் ரூ.40.000/- வரையும் மாத ஊதிய தொகை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ICSI தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
ICSI விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்கு முன்னதாக சமர்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 27.02.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது எனவே விண்ணப்பதாரர்கள் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய அழைக்கப்படுகிறார்கள்.