ICSE, ISC 10 , 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – இன்று பிற்பகல் வெளியீடு !!
இந்தியாவில் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி பள்ளிகளின் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பீட்டு அடிப்படையிலான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (24.07.2021) பிற்பகல் 3 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. அதனால் அனைத்து பள்ளி நிர்வாகங்களும் வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. அதன் பிறகு ஜனவரி மாதம் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்களை பொதுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தினர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியது. அதனால் மீண்டும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறப்பு – அரசு அனுமதி!
கொரோனா தொற்று பரவல் மென்மேலும் அதிகரித்ததால் பொதுத்தேர்வுகள் நடத்த சாதகமான சூழல் நிலவவில்லை. 10, 12 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடத்தினால் மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என்ற கருத்துக்கள் பெறப்பட்டது. அதனால் மாணவர்களின் உடல் நலம் கருதி மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. அதனை தொடர்ந்து ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
10 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
அதன் படி நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி பள்ளிகள் மத்திய கல்வி வாரியத்தின் வழிகாட்டலின் படி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்களை கணக்கிடும் பணியை தொடங்கியது. அதன்படி 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பீடு அடிப்படையிலான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (24.07.2021) பிற்பகல் 3 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மொபைலில் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.