ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ICSE பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தேர்வுகளை நடத்துவது குறித்து ஜூன் மாதத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு:
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையை கருத்தில் கொண்டு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைந்தால் மட்டுமே தேர்வுக்கான புதிய தேதிகள் ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் 2021 ஜூன் 7 வரையிலும், ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் 2021 ஜூன் 18 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யவும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம் – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!!
சிபிஎஸ்இயின் முடிவைத் தொடர்ந்து, பல மாநில அரசுகளும் அந்தந்த வாரியங்களால் நடத்தப்பட வேண்டிய வாரியத் தேர்வுகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய முடிவு செய்து வருகின்றன. மாணவர்களின் நலனுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அந்தந்த தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாநில அரசுகள் ஐ.சி.எஸ்.இ, கேம்பிரிட்ஜ் வாரியம் மற்றும் பிற உயர் தனியார் கல்வி வாரியங்களுக்கும் கடிதம் எழுதியிருந்தன. தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்