SpaceX ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஐஸ்கிரீம், எறும்புகள் & ரோபோட்!
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களுக்காக ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்கள், எறும்புகள் மற்றும் சோதனை ரோபோட் என 2,170 கிலோ எடையுள்ள பொருட்கள் SpaceX ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி:
ISS எனும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி வீரர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் உணவு பொருட்கள் மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான உபகரணங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும். ISS அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது எலான் மஸ்க் நிறுவிய SpaceX நிறுவனத்தின் ராக்கெட் மூலமாக சுமார் 2,170 கிலோ எடையுள்ள பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 7 வீரர்கள் ISS இல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
செப்டம்பர் 6 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி!
SpaceX ராக்கெட் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பெண் எறும்புகள், உப்பு இறால் மற்றும் சோதனை தாவர பாடங்கள் போன்றவற்றையும் சுமந்து சென்றுள்ளது. அதே நேரத்தில் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மரபணு ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய விதைகள், கான்கிரீட், சூரிய மின்கலங்கள் மற்றும் பிற பொருட்களின் மாதிரிகள் ஆகியனவும் அனுப்பப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் சோதனை ரோபோட்டும் சேர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது அதன் சுற்றுப்பாதையில் விண்வெளி வீரர்களால் செய்யப்படும் மற்ற சாதாரண வேலைகளை செய்ய பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட சோதனைகள் விண்வெளி நிலையத்திற்குள் செய்யப்படும். ஏற்கனவே இப்பொருட்கள் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் புயல் வானிலையால் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து 2வது முயற்சியில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.