உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி – ஐசிசி அதிரடி!
கொரோனா தொற்றின் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு செல்லும் 15 வீரர்கள் மற்றும் அவர்கள் உடன் வரும் எட்டு அதிகாரிகளுக்கு ஆகும் செலவுகளை ஐசிசி ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்:
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் இந்தியாவில் நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை போட்டியை ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் உடன் வருபவர்கள் குறித்த பட்டியல் மற்றும் விவரங்கள் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க பயனாளிகள் தேர்வு – முதல்வர் அறிக்கை!
கூடுதல் வீரர்களை கூட்டி செல்லும் அந்தந்த நாட்டின் கிரிக்கெட் வாரியமே அதற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என்றும் பயோ பபிள் மற்றும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் இந்த ஆண்டு இந்த விதிமுறை நடைமுறையில் உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. 15 வீரர்கள் மற்றும் உடன் வரும் எட்டு அதிகாரிகளுக்கு ஆகும் செலவுகளை ஐசிசி ஏற்றுக் கொள்ளும் எனவும், கூடுதல் வீரர்களுக்கான செலவுகளை ஐசிசி ஏற்காது எனவும் கூறியுள்ளது.
TN Job “FB Group” Join Now
டி20 உலகக் கோப்பைப் போட்டி ஐக்கிய அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்க உள்ளது. துபாய், அபுதாபி மற்றும் சார்ஜாவில் அக்டோபர் 17 ம் தேதி முதல் நவம்பர் 14 ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில் பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பங்கு பெறும் தகுதி சுற்று போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள வேறொரு மைதானத்தில் நடைபெறும். கொரோனா தொற்று அல்லது காயங்கள் ஏற்பட்டால் வேறு வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என ஐசிசி கூறியுள்ளது. இறுதி பட்டியல் வழங்கி வீரர்கள் தனிமைப்படுத்தப்படும் 5 நாட்களுக்கு முன்னரே தெரியப்படுத்துவதோடு, வீரர்களை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.