கோயம்புத்தூரில் ரூ.21420/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICAR கீழ் இயங்கி வரும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR-SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. Security Guard பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 04.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ICAR SBI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ICAR- கரும்பு வளர்ப்பு நிறுவனம் முன்னாள் படைவீரர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ICAR SBI வேலை அறிவிப்பின்படி, பாதுகாப்பு காவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நியமனம் பெறலாம்.
- தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04.01.2023 அன்று காலை 10.30 மணிக்கு நேர்காணலில் ஆஜராக வேண்டும். ஒப்பந்த கால அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் ICAR SBI வேலைகளுக்கான அறிவிப்பைப் படித்துவிட்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21420 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் ஒப்பந்த காலம் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.