ரூ.56,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்..!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IARI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Subject Matter Specialist (Agrometeorology) பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
ICAR-IARI வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IARI) காலியாக உள்ள Subject Matter Specialist (Agrometeorology) பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Subject Matter Specialist பணிக்கு அரசு அல்லது அரசு கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agrometeorology, Agronomy, Meteorology, Agriculture Physics பாடப்பிரிவில் M.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் Ph.D Degree மற்றும் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும், அதிகபட்சம் 35 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் OBC – 03 ஆண்டுகள், SC / ST / பெண்கள் – 05 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. இந்த Subject Matter Specialist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.56,100/- மாத சம்பளமும், HRA போன்ற இதர ஊதியமும் பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.05.2022 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன ICAR-IARI) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரத்திற்கு (காலை 11.00 மணிக்கு) முன் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்விற்கு முன்னரே பதிவு செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.