CICR மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!
பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (ICAR-CICR) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் Young Professional, Senior Research Fellow பணிக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
ICAR CICR வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தில் (ICAR-CICR) Young Professional பணிக்கு என 03 இடமும், Senior Research Fellow பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறந்த coaching centre – Join Now
- Young Professional பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Com / BCA / Master Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agricultural Seed Science, Technology, Plant Breeding, Botany பாடப்பிரிவில் M.Sc, Ph.D Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- SRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ICAR / CSIR / UGC -ஆல் நடத்தப்படும் NET தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Young Professional பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
- SRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- Young Professional பணிக்கு 24.05.2022 அன்றும், SRF பணிக்கு 23.05.2022 அன்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேர்காணல் நடைபெற உள்ளது.
ICAR-CICR விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகலை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் இன்று மற்றும் நாளை நடைபெறும் நேர்காணலில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையவும்.