அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆடிட்டிங் தேர்விற்கு பயிற்சி !!
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆடிட்டிங் தேர்விற்கான பயிச்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆடிட்டிங் தேர்வு !
இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் ஆடிட்டிங் பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வானது ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும். கணக்கு தணிக்கையாளர் பணிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் இந்த தேர்வினை எழுதலாம்.
பயிற்சி வகுப்புகள் !
இந்த தேர்வுகளுக்கு தயாராகும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை மற்றும் இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு ஆகியவை சேர்ந்து பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. அடுத்த 2021 மே மாதத்தில் நடைபெற உள்ள தேர்விற்கு தற்போது பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ரூ.9,200/- கட்டணம் செலுத்த வேண்டும். 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்விக்ரு பின்னர் வரும் சிஏ தேர்வினை எழுத வேண்டும். ஏனெனில் இத்தேர்வு முடிவ வருவதற்குள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜனவரி 01ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் வரும் டிசம்பர் 23 முதல் அடுத்த ஏப்ரல் 10ம் தேதி வரை நடத்தப்படும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்