நாளை முதல் தொடங்க இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு !!
இந்தியா முழுவதும் நாளை முதல் நடைபெற இருந்த ஆடிட்டர் பணிக்கான சி.ஏ தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
சி.ஏ. தேர்வுகள் :
இந்திய பட்டய கணக்காளர் சங்கம் (ICAI) மூலமாக Charted Accountant (CA) தேர்வுகள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆடிட்டர் பணியில் சேர விரும்புவோர் கண்டிப்பாக இந்த தேர்வினை எழுத வேண்டும். கொரோனா தொற்றின் காரணமாக முதன் முதலில் இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
TN Police “FB Group” Join Now
ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதால் மீண்டும் தேர்வுகளை நடத்த ICAI ஆயத்தமாகிய நிலையில் நிவர் புயலினால் மீண்டும் தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டது. அதனையும் சரி செய்து பின்னர் நாளை முதல், அதாவது டிசம்பர் 08 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்வுகள் ஒத்திவைப்பு !
தேர்வு நடைபெறும் என மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், நாளை முதல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.ஏ.தேர்வுத்தாள்-1 ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களால் சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஏற்கனவே வெளியான தேர்வு நுழைவுச்சீட்டே அடுத்து நடத்தப்படும் தேர்வுகளுக்கு பொருந்தும் எனவும் புதிய தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |