IBPS 8105 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
வங்கி பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு வங்கி கிளைகளில் குரூப் ஏ, குரூப் பி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
வங்கி காலியிடம்:
வங்கி பணியாளர் தேர்வாணையம் சார்பில் தற்போது வெளியான அறிவிப்பு, பல்வேறு வங்கி கிளைகளில் குரூப் ஏ, குரூப் பி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, உதவி மேனேஜர், வேளாண் அதிகாரி, மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, சீனியர் மேனேஜர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு சுமார் 8,105 பேர் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஊழியர்கள் பட்டப்படிப்பு அல்லது எம்.பி.ஏ., சி.ஏ. இன்ஜினியரிங் படித்து முடித்திருக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு – பிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பு?
இந்த பணிக்கு குறிப்பிட்ட வயது வரம்பு அறிக்கையில் குறிப்பிட்டபடி, 1-6-2022 தேதிப்படி 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு தகுந்தவாறு வயது வரம்பு மாறுபடும். இந்த பதவிக்கு முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்த ஆவணங்கள் சேர்த்து 27.06.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை அறிய https://www.ibps.in/ என்ற இணையதளத்திற்கு பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.