தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!
தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பணியிட மாற்றம்:
நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான பகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அரசு ஊழியர்கள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் வாடா மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக தென் மாவட்ட ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் மாற்றங்கள் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!
அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கலை மற்றும் கலாச்சாரத்துறை கமிஷனராக இருந்த கலையரசி ஐ.ஏ.எஸ்., தற்போது அரசின் பொது மற்றும் மறுவாழ்வு துறைக்கான சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு துணை கலெக்டர் ப்ரதிக் தயாள் ஐ.ஏ.எஸ்., அரசு நிதித்துறை இணை செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Flipkart நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!
பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு நீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கூடுதல் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் துணை வட்டாட்சியராக இருந்த மதுபாலன் ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் துணை கலெக்டராக இருந்த சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., சென்னை பெருநகர மாநகராட்சியின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பிரிவின் சிறப்பு அலுவலராக இருக்கும் ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ்.,க்கு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.