12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விமானப்படையில் (IAF) வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காலியாக உள்ள Lower Division Clerk (LDC) பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 05.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Air Force (IAF) |
பணியின் பெயர் | Lower Division Clerk (LDC) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய விமானப்படை காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Lower Division Clerk (LDC) பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே இந்திய விமானப்படையில் (IAF) காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lower Division Clerk கல்வி விவரம்:
- Lower Division Clerk (LDC) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் / ஹிந்தி மொழியில் ஒரு நிமிடத்தில் 35 / 30 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்திய விமானப்படை சம்பள விவரம்:
இந்த இந்திய விமானப்படை பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level – 2 என்ற ஊதிய அளவின் படி, மாத சம்பளம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த coaching centre – Join Now
Lower Division Clerk வயது விவரம்:
05.09.2022 அன்றைய தினத்தின் படி, இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 35 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
- Written Test
- Skill Test
- Practical test
- Physical Test
IAF விண்ணப்பிக்கும் முறை:
இந்த இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 05.09.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.