என் வீட்டிற்கு உன்னை அழைத்துச்செல்ல மாட்டேன் – கறாராக கூறிய கோபி! வீட்டை விட்டு வெளியேற சொல்லும் ராதிகா!
உடனே உங்களது வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என கோபியிடம் ராதிகா கேட்கிறார். கோபி கூட்டி செல்லமாட்டேன் என மறுத்ததால் அப்போ வீட்டை விட்டு கிளம்புங்கள் என ராதிகா கோவத்தில் கத்தும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி போலியான குடும்பத்தை காட்டி ராதிகாவிடம் இருந்து தப்பிப்பாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது கோபியும் ராதிகாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மூர்த்தியும் தனமும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். அதன் பின்பு கோபி தான் ராதிகாவை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் தெரியவருகிறது. நீங்கள் உங்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். அவரது குடும்பத்தை முதலில் பாருங்கள். அதற்கு பிறகு என்ன வேண்டுமென்றாலும் முடிவு செய்யுங்கள் என மூர்த்தி ராதிகாவிடம் கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
உடனே ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. கோபி வீட்டிற்கு வந்ததுமே உங்களது குடும்பத்தை காட்டுங்கள் என கேட்கிறார். ஆனால், கோபி கோவத்தில் முடியாது என சொல்கிறார். காட்டவில்லையென்றால் வீட்டை விட்டு வெளியே போங்கள் என கோபியிடம் ராதிகா கோவமாக பேசிவிடுகிறார். பின்பு, மீண்டும் அதே போல கோபி வீட்டிற்கு வரும் போது இப்போதே என்னை உங்களது வீட்டிற்கு கூட்டி செல்லுங்கள். உங்களது குடும்பத்தில் உள்ளவர்களை பார்க்க வேண்டும் என ராதிகா அடம்பிடிக்கிறார்.
நடிகை ஆலியா மானஸாவிடம் காதலை சொன்ன சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
யாரோ ஒருவர் என்னை பற்றி தவறாக பேசியதை நீ நம்புகிறாயா என கோபி சமாளிக்க முயற்சிக்கிறார். ஆனாலும், ராதிகா விடாமல் உங்களது குடும்பத்தை பார்த்தால் மட்டுமே என்னால் ஒரு முடிவிற்கு வர முடியும் என கூறுகிறார். சாதாரணமாக என்னை வீட்டிற்கு கூட்டி போங்கள் என கேட்டிருந்தால் கண்டிப்பாக அழைத்து சென்றிருப்பேன். ஆனால், என் மீது சந்தேகப்பட்டு தானே அழைத்து செல்ல வேண்டும் என கேட்கிறாய். கண்டிப்பாக கூட்டி செல்ல முடியாது என கோபி சொல்கிறார். அப்போ வீட்டை விட்டு வெளியே போங்கள் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.