IPL 2022: மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் – பிரியம் கார்க் பேட்டி!

0
IPL 2022: மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் - பிரியம் கார்க் பேட்டி!
IPL 2022: மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் - பிரியம் கார்க் பேட்டி!
IPL 2022: மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் – பிரியம் கார்க் பேட்டி!

2020 ஐசிசி யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய இளம் கேப்டன் பிரியம் கார்க் , கடந்த ஆண்டு IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தற்போது இந்த ஆண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரியம் கார்க் பேட்டி:

IPL மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாயில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லின் அனைத்து 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்த நிலையில் இதில் 590 வீரர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2021 ஆண்டின் BCCI யின் விதிமுறையின் படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை 14 கோடி ரூபாய்க்கும், அப்துல் சமத்தை 4 கோடி ரூபாய்க்கும், உம்ரான் மாலிக்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துக் கொண்டது. 3 வீரர்களை தக்கவைத்து பின் இன்னும் 68 கோடி மீதம் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

2020 ஆம் ஆண்டு ஏலத்தில் புதிதாக யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய இளம் கேப்டன் பிரியம் கார்க்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. 2020 ஆண்டு பிரியம் கார்க் பிளேயிங் 11 யில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற போட்டிகளில் பிரியம் கார்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தொடரில் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி பிரியம் கார்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மீண்டும் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரியம் கார்க் விடுவிக்கப்பட்டார்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு – இன்றைய நிலவரம்!

சமீபத்தில் IPL ஏலம் குறித்து பிரியம் கார்க் பேட்டியளித்தார், அதில் ஐபிஎல் ஒரு பெரிய தளம், நான் மட்டுமல்ல, இந்த பெரிய போட்டியின் காரணமாக ஒவ்வொரு வீரருக்கும் அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஐபிஎல்லில் விளையாடும் போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட விரும்புகிறேன் ஏனென்றால் நான் அவர்களுடன் விளையாடிய இரண்டு வருடங்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!