IPLல் சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்புகிறேன் – தினேஷ் கார்த்தி பேட்டி!
இந்த ஆண்டு IPL தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் BCCI அறிவிப்பின்படி தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் கொல்கத்தா அணியில் கடந்த ஆண்டு வரை விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை அவ்வணி தக்க வைக்கவில்லை. தற்போது இது குறித்து தினேஷ் கார்த்திக் பேட்டியளித்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வரவிருக்கும் மெகா ஏலத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு IPL போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனை சமீபத்தில் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி IPL போட்டிகள் மகாராஷ்டிரா – மும்பை மற்றும் புனேவில் நடைபெறும் என்று உறுதி செய்தார். எனினும், நாக் அவுட் போட்டிக்கான இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு IPL யில் பங்கேற்கும் பத்து அணிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், 8 அணிகளால் தக்கவைக்கப்படாத வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, நிச்சயம் அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்திக் தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு – 75 காலிப்பணியிடங்கள்..!
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் , நான் சென்னையை சேர்ந்தவன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். எந்த அணியில் விளையாட வாய்ப்பு வந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார். எனவே இம்முறை CSK அணி தினேஷ் கார்த்திகை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.