விஜய் டிவி சீரியலை விட்டு விலக நான் காரணம் இல்லை – மனம் திறந்த நடிகர்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், பிரபல சீரியல்களில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் அருணாச்சலம் கதாபாத்திரம் மாற்றப்பட்டதற்கு காரணம் குறித்து அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
நடிகர் விளக்கம்
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் பல டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வந்தாலும், மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களுக்கு தனிப்பட்ட மவுசு இருக்கிறது. அந்த சீரியல்களில் ஹீரோ, ஹீரோயின் போலவே அதில் நடிக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் அதிக அளவில் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் அருணாச்சலம் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தசரதி. அவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.
அந்த சீரியல் தொடக்கம் முதல் அருணாச்சலம் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்து வந்த அவர், திடீரென சீரியலை விட்டு விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அவர் சீரியலை விட்டு விலக என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் ஈரமான ரோஜாவே 2 சீரியலை விட்டு விலகிய காரணத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் சீரியலை விட்டு நானாக விலகவில்லை என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.
புது சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கும் பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் – ரசிகர்கள் உற்சாகம்!
Exams Daily Mobile App Download
நான் சீரியலை விட்டு விலகுவது தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு, நான் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை போல என பதில் அளித்து இருக்கிறார். அதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அவர் அருணாச்சலம் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக இருந்ததால் அவருடைய மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் மீண்டும் வேறு ஒரு சீரியலில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.