மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி (HRA) உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இப்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படியும் வழங்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வீட்டு வாடகைப்படி:
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அரசுக்கு பெரும் செலவினம் ஏற்பட்டு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைத்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
Post Office சேமிப்பு திட்டம் – 5 வருடங்களில் ரூ.1,94,746 லட்சம் வட்டித்தொகை! முழு விபரம் இதோ!
இதனை தொடர்ந்து அதே ஆண்டில் ஜூலை மாதத்தில் 3% உயர்த்தப்பட்டு 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதன்படி இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அமைச்சரவை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இப்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு கடந்த 2021ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான வீட்டு வாடகைப்படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளன. வீட்டு வாடகைப்படி உயர்வு ஊழியர்கள் இருக்கும் நகரங்களை பொறுத்து வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பெருநகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்கும் மற்ற நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்கும் வேறுபாடு உள்ளது. மேலும் தற்போது பணவீக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் பணவீக்கம் 6.07% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.