Office வேண்டாம்.. 92% இந்திய ஊழியர்களுக்கு தேவை இதுதான் – ஆய்வில் வெளியான அதிரடி தகவல்!
இந்தியாவில் உள்ள பல நிறுவன ஊழியர்கள் ஹைபிரிட் முறையில் வீட்டில் இருந்தும் சிலர் அலுவலகத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஊழியர்கள் ஹைபிரிட் மாடலை அதிகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைபிரிட் மாடல்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் சாதாரண நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது. ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் நேரத்தில் ஊழியர்கள் தினமும் அலுவலகம் வந்து பணியாற்றுவதில் பல்வேறு சிக்கலை எதிர்கொண்டனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு WFH ஆப்ஷன் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஓரளவு பாதிப்புகள் குறைந்து நாட்டின் இயல்பு நிலை திரும்பியதும் சில நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய அழைப்பு விடுத்தது. மேலும் ஊழியர்களுக்கு ஹைபிரிட் மாடல் என்னும் முறையையும் அறிமுகப்படுத்தியது.
ட்விட்டர் செயலியில் வந்துள்ள மேஜர் அப்டேட் – மஸ்கின் புதிய திட்டம்!
Exams Daily Mobile App Download
ஹைபிரிட் மாடல் என்றால் ஒரு நிறுவனத்தின் பாதி ஊழியர்கள் வீட்டில் இருந்தும் மீதமுள்ள ஊழியர்கள் அலுவலகம் வந்து பணி புரிவது. இந்த நிலையில் ஹேச்பி நடத்திய ஆய்வு ஒன்றில் 92% ஊழியர்கள் சில நாட்கள் அலுவலகம் வந்து பணிபுரிந்து விட்டு மீதி நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் ஹைபிரிட் மாடலை விரும்புவதாக கண்டறியபட்டுள்ளது. தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் நிலவி வரும் மூன் லைட்டிங் பிரச்சனையால் WFH ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வரவழைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.