TNUSRB போலீஸ் தேர்விற்கு தயாராவது எப்படி? பாடத்திட்டம் குறித்த முழு விவரங்கள்!

0
TNUSRB போலீஸ் தேர்விற்கு தயாராவது எப்படி? பாடத்திட்டம் குறித்த முழு விவரங்கள்!
TNUSRB போலீஸ் தேர்விற்கு தயாராவது எப்படி? பாடத்திட்டம் குறித்த முழு விவரங்கள்!
TNUSRB போலீஸ் தேர்விற்கு தயாராவது எப்படி? பாடத்திட்டம் குறித்த முழு விவரங்கள்!

தமிழகத்தில் காவலர் பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான தகுதித்தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெறுவது எப்படி மற்றும் பாடத்திட்டங்கள் குறித்தான அனைத்து விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மொத்தமாக 3,552 காலி பணியிடங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் திறமையான காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதாவது, காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். அதில், முதல் பகுதியாக தமிழ் மொழி தகுதி தேர்வும், இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்து தேர்வும் நடைபெறும்.

தமிழக KV பள்ளிகளில் 12, 000க்கு அதிகமான காலிபணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!

முதல் பகுதியாக நடைபெறும் தமிழ் மொழித் தகுதி தேர்வு 80 மதிப்பெண்ணிற்கு நடைபெறும். இதில், தேர்வாளர் கட்டாயமாக 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. அதாவது, தமிழ் மொழித் தகுதி தேர்வில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். அதிலும், இலக்கண பகுதியில் எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

Exams Daily Mobile App Download

இதே போல, இலக்கியத்தில் திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றில் இருந்து வினாக்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் பகுதியில் இருந்து தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு ஆகியவற்றில் இருந்து வினாக்களும் கேட்கப்படும்.

இந்த தமிழ்மொழி தகுதி தேர்வினை அடுத்து முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். அதாவது, 70 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் இந்த தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் இடம்பெறும். மேலும், உளவியல் பிரிவில் இருந்து தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

கணிதத்தை பொறுத்த வரைக்கும் சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவற்றில் இருந்து எளிமையான கேள்விகள் இடம்பெறும். மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை தெளிவாக படித்துவிட்டாலே கண்டிப்பாக தேர்வில் நல்ல மதிப்பெண்ணை பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!