தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ரேஷன் கடை திறப்பு பற்றி அறியும் வழிமுறைகள் – புதிய திட்டம் அறிமுகம்!

0
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ரேஷன் கடை திறப்பு பற்றி அறியும் வழிமுறைகள் - புதிய திட்டம் அறிமுகம்!
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ரேஷன் கடை திறப்பு பற்றி அறியும் வழிமுறைகள் - புதிய திட்டம் அறிமுகம்!
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ரேஷன் கடை திறப்பு பற்றி அறியும் வழிமுறைகள் – புதிய திட்டம் அறிமுகம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தமிழ்நாடு அரசின் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டம் மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பயனடைந்து வருகின்றனர். மேலும் பல ஏழை எளிய மக்களுக்கு இந்த ரேஷன் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. தமிழக அரசு கொரோனா காலகட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகையும், இலவசமாக உணவு பொருட்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

தமிழக அரசு தற்போது ரேஷன் கடைகளில் பல புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் விற்பனையை தொடங்க உள்ளதாக கூட்டுறவு துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் வைஃபை இணைய வசதியும் செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. அந்த வகையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் திறந்து உள்ளதா என் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

மக்கள் தங்கள் பகுதியில் ரேஷன் கடைகள் திறந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழ்கண்ட படிநிலைகளை படித்து தெரிந்து கொள்ளுமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1: உங்கள் ஊரில் ரேஷன் கடை திறந்து உள்ளதா என தெரிந்து கொள்ள முதலில்  https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இணையதளத்திற்கு சென்ற பிறகு பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் என்பதை கிளிக் செய்யவும்.

2: நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் ஊர் ரேஷன் கடை குறித்த தகவல்கள் காண்பிக்கப்படும். அதில் கடை திறந்து உள்ளது என்றால் ஆன்லைன் என்றும், கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் என்றும் சிவப்பு நிறத்தில் குறிக்கப்படும். அதுவே கடை திறந்து இருந்தால் ஆன்லைன் என்று பச்சை நிறத்தில் குறித்து காட்டப்படும்.

மேலும் இந்த பக்கத்தில் ரேஷன் பொருட்களின் இருப்பு நிலைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு பொருட்கள் இருப்பு நிலை என்ற என்பதை கிளிக் செய்தால் எந்த பொருட்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும். அதை வைத்து நீங்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த பக்கத்தில் பொதுமக்கள் புகார் என கிளிக் செய்யும் போது அந்த பகுதி மக்கள் செய்த புகார்கள் குறித்த விவரங்கள் தெரியவரும். புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, புதிய பெயரை சேர்ப்பது போன்ற செயல்களை www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் செய்ய முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!