எவ்வித ஆவணமும் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் அட்டை குடிமக்களுக்கு தேவையான மற்றும் முக்கியமான ஆவணம் ஆகியுள்ளது. எந்த வித முக்கிய ஆவணமும் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது குறித்த விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதார்:
இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம்,முகவரி, காய் ரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது.இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் கடை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.
ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! பட்லருக்கு வாய்ப்பு!
அனைத்து குடிமக்களுக்கும் இந்த பயோமெட்ரிக் தனித்துவ அடையாள கார்டு வழங்குவதற்காக நாட்டின் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் பலரிடம் போதிய ஆவணம் இல்லாத காரணத்தால் மிகவும் கடினமான ஒன்றாகியுள்ளது. இதுவரை 123 கோடி மக்களுக்கு ஆவணச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.ஆவணங்கள் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆவணங்கள் இல்லாமல் ஆதார் கார்டு விண்ணப்பிக்க, UIDAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட அறிமுகதாரரின் உதவியைப் ஆதார் கார்ட் பெற்றுக்கொள்ளலாம்.
- அந்த அறிமுகதாரரால் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தைப் பெறவேண்டும்.
- படிவத்தை ஆதார் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் போன்ற உங்கள் பயோமெட்ரிக் டேட்டா வழங்கிய பின் ஒப்புகைச் சீட்டு உருவாக்கப்படும் அதில் பதிவு எண் அடங்கியிருக்கும்.
- பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஆதார் அட்டை தபால் மூலம் அனுப்பப்படும்.