ஆதார்-பான் இணைப்பின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டுமா? Simple Steps இதோ!
பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் இணைக்கவில்லையெனில் பான் கார்டுகள் செயல்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. தற்போது பான் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
பான் எண்
ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரியானது பான் கார்டு மூலமாக வருமான வரி ஆணையம் கண்காணித்து வருகிறது. தற்போது இந்த பான் எண்ணுடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இதனை வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் உங்களின் பான் கார்டு செயல்படாது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் நபர்கள் இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ‘லிங்க் ஆதார்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்போது உங்களின் பான், ஆதார் எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். அடுத்ததாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ‘Link Aadhar’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.. விவரம் உள்ளே!
ஆதார்-பான் இணைப்பின் நிலையை சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்:
1. இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2.’லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
3. இப்போது உங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
4., ‘View link Aadhar status’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. இறுதியாக பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த செய்தி திரையில் தோன்றும்.