இனி தமிழ்வழி சான்றிதழ் ஆன்லைனில் பெறலாம் – TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழை ஆன்லைன் வாயிலாக எளிதாக பெறலாம். இதற்கான வழிமுறைகள் குறித்து பதிவில் காண்போம்.
தமிழ் வழி சான்றிதழ்:
தமிழகத்தில் TNPSC தேர்வுகள் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என அனைத்து தேர்வுகளிலும் 100 மதிப்பெண்களுக்கு தமிழ்த்மொழி தேர்வு நடத்தப்படும். இதில் 40% மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயம் என்று தேர்வாணையம்தெரிவித்ததுள்ளது. அதனைத் தொடர்ந்து TNPSC தேர்வுகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா – ஜப்பான் இடையே விமான பயிற்சி – நாடுகளின் உறவை வலுப்படுத்த திட்டம்!
Follow our Instagram for more Latest Updates
இதற்காக விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை பள்ளியில் இருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆரம்பத்தில் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தமிழ் வழி சான்றிதழை பெற்று வந்தனர். இந்த முறையில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் தற்போது ஆன்லைன் வாயிலாக PSTM சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
PSTM சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
- முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும்
- அதில் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
- அடுத்து வரும் பக்கத்தில் உள்ள “Service” என்பதில் வருவாய்த்துறை என்பதை கிளிக் செய்து PSTM சான்றிதழ் என்பதை கிளிக் செய்யவும்
- பிறகு ஓப்பன் ஆகும் பக்கத்தில் உள்ள முழு விவரங்களை நிரப்பி SUBMIT கொடுக்கவும்.
- இறுதியாக ரூ. 60 கட்டணம் செலுத்தி உங்களது ரசீதை பெறலாம்.