புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்களுடன்!
ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆன்லைன் மூலமாகவே எளிதில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை முதலான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களை பெறுவதற்கும் இன்றிமையாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் அனைத்து நலத் திட்டங்களையும் பெற விரும்பினால் அவ்வப்போது ரேஷன் கார்டை அப்டேட் செய்தபடி இருக்க வேண்டும். மேலும், ரேஷன் கார்டில் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.
Exams Daily Mobile App Download
இது மட்டுமல்லாமல் புதிதாக ஏதேனும் குழந்தை பிறந்தால் கூட கண்டிப்பாக அந்த குழந்தையின் பெயரையும் ஆதார் கார்டுடன் இணைத்துவிட வேண்டும். மேலும், ரேஷன் கார்டு தொலைந்துவிட்டாலும் புதிய ரேஷன் கார்டிற்காக அலைய வேண்டியதில்லை. வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாகவே எளிதாக புதிய ரேஷன் கார்டிற்கு பதிவு செய்ய முடியும். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டிற்கு பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறாதோருக்கான அறிவிப்பு – முக்கிய தகவல்!
முதலில், தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://www.tnpds.gov.in/ என்கிற பக்கத்திற்கு சென்று லாகின் செய்துகொள்ள வேண்டும். பின்பு, நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனை பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்குள் நுழைய வேண்டும். பின்பு, உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து PDF ஃபைலை சேமி என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று நகலை ஒப்படைக்க வேண்டும். இதன் பின்னர் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவிடும்.